Site menu:

Backgrounder:

The conference is organised by the Centre for South Asian Studies, University of Toronto and University of Windsor.

Art e-Exhibit:

The organisers are pleased to electronically showcase the works  of artists Vasuki, Kiko and Vasan, all based in Batticaloa, Sri Lanka.
[:vasuki:]

Wise Words:

"...They have not known sleep for long / Dreams crawl worming through the brain / Coil in the interstices of the mind / Breeding from the seed of thought / That quivers faintly into bloodied root / Their eyes never close, the heart explodes / All they know is that death comes tomorrow / Now the wind blows through the fretting trees.
 (Jean Arasanayagam)

தமிழியல் மாநாடு 2007: இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்


தொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற இரண்டாவது தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2007ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெறும்.

வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர்.

மாநாட்டின் இலக்கு

தமிழர்கள் ஒரு கூட்டுக் குழுமமாக எப்படி உருவாகி வந்திருக்கிறார்கள்? இதன் தொடர்ச்சி, மாற்றங்கள் ஆகியவை யாவை? இதனை எப்படிப் புரிந்துகொள்வது போன்ற சவால்மிக்க கேள்விகளை புலமைத்துவம் சார்ந்து நாங்கள் எழுப்பவேண்டியுள்ளது. “தேசியம்”, “அடையாளம்” குறித்த கேள்விகள் அரசியல் , சமூக இயக்கங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளதோடு தமிழ் வழங்கும் இடங்களில் சுயத்தை நிர்ணயிப்பதாகவும் விளங்குகின்றன. மேலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு “தமிழத்தன்மை” குறித்த உணர்வை மறு உருவாக்கவும் விளக்கவும் “தேசியம்”, “அடையாளம்” என்பதன் தொடர்ச்சியும் சிக்கல்களும் மிக முக்கியமாகின்றன.

எனவே தென்னிந்தியா, ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழ் வழங்கும் இடங்களுக்குள்ளே உள்ள இனத்துவ அடையாங்களின் உருவாக்கம், விரிவாக்கம், மாற்றம், புரிதல், தர்க்கம் போன்றவற்றின் வரலாற்றை, வரலாற்றினுhடாகவும் கற்கைநெறிவழியாகவும் விளக்கும் கட்டுரைகளைப் படைக்கக் புலமையாளர்களை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

தமிழியல் கல்வியில் தமிழ்ப் புலம்பெயர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், சில அரங்குகள் புலம்பெயர் சமூகத்தின் மொழிப் புழக்கம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே தனியாக ஆராய்கின்றன.

ஆகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டிருக்கும் தொறொன்ரோவில் தமிழியல் கல்வி வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாநாடுகள் அமைகின்றன. (தமிழியல் கல்வி பற்றிய விவரங்களை www.tamilstudies.org என்ற இணையத் தளத்தில் பார்க்கவும்).

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டின் இலக்குகள்: